ஏன் உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்க வேண்டும்?
எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா ஒருவர் இருக்க வேண்டுமா? என்று கேட்டால் நிச்சயம் வேண்டும்! இல்லையென்றால் எல்லாம் ஒழுங்கு கெட்டுவிடுமே!
.
எல்லாம் ஒரு ஒழுங்கின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருப்பதாலே இறைவன் இருப்பதை அறிவிக்கின்றன.
.
.
உள்ளதை நிருபிக்க தேவலோக உதாரணம் தேவையில்லை. கண்முன் நடக்கும் காட்சிகளே போதும். இந்த உலகில் ஒரு கம்பனியோ ஒரு தொழில்சாலயோ ஒரு குடும்பமோ, பள்ளியோ சரியாக இயங்க ஒரு காரணகர்த்தா நிச்சயம் உண்டு. செயற்கையாக நடைபெறும் எல்லா செயலுக்கும் பின்னால் ஒரு காரண கர்த்தா உண்டல்லவா? அதுபோல் இயற்கையாக நடைபெறும் எல்லா செயலுக்கும் பின்னால் இறைவன் என்ற காரணகர்த்தா இருக்கிறார் என்பதே எனது கருத்து!
.
.
மனிதனின் கவனத்தால் கார் கண்ட்ரோலோடு ஓடும்! கண்ட்ரோலை இழந்த கார் கவிழ்வது விடுவதுபோல் கவிழாமல் இந்த உலகம் உருப்படியாக அதன் பாதையில் சுற்றுகிறதென்றால் அது யாராலோ நிர்மாணிக்கப்படுகிறது என்பதுதானே அர்த்தம்
.
.
மனிதன் எத்தனையோ இயந்திரங்களை உருவாக்கியுள்ளான் எதுவுமே தானாக உருவாகவில்லை. உருவாகிய எதுவும் பராமரிப்பு இல்லையென்றால் பயனற்று போய்விடும். ஆனால் இந்த உலகம் எத்தனையோ கோடி ஆண்டுகளை கடந்தும் இன்னமும் பொலிவுடன் இருக்கிறதென்றால் பரமாரிப்பில்லாமல் முடியுமா?
.
.
எவ்வளவு அழகான கணினி இருந்தாலும் அதற்க்கு உயிரைக்கொடுக்கும் மின்சாரம் இல்லையென்றால் பயனில்லை அதுபோல் மனிதன் மகாத்தனவனாக இருந்தாலும் உயிர் என்னும் மூச்சு காற்று இல்லையெனில் அவன் ஒன்றுமில்லை! அதை பிடித்து வைத்திருப்பது அவன் கையில் இல்லை! விண்வெளியில் பறக்கும் ராக்கெட்டை கண்ட்ரோல் பண்ண தெரிந்தவனுக்கு தன்ன்ளுள் இருக்கும் உயிரை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இவையெல்லாம் இறைவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் உண்மைகள்!
.
.
பல்வேறு மனிதர்கள் எழுதிய NDEகளை படித்துப்பார்த்தால், மரணம் மனிதனின் முடிவல்ல மற்றொரு வாழ்க்கையின் தொடக்கம் என்பதை அறிந்துகொள்ளலாம்!
.
.
இறைவன் தன்னை ஒழித்துக்கொண்டு இருக்கவில்லை நாம்தான் அவரைவிட்டு விலகி விலகி ஓடுகிறோம். நம்முன் வந்து நான்தான் இறைவனென்று காண்பிக்க அவருக்கு ஒரு உருவமில்லை அவர் ஒரு மாமிசம் அல்ல! அவர் ஒரு வல்லமை அல்லது சக்தி அவரால் நம்மை ஆட்கொள்ள முடியும். நம்முள் வந்து நம்மோடு பேச முடியும். நம்மை நடத்த முடியும். நான்தான் இறைவனென்று அவரால் இயம்பமுடியும்!
.
.
இப்பொழுது இந்த மாமிச கண் பார்வை சில விதி முறைகளுக்குட்பட்டது! சுவருக்கு பின்னால் இருக்கும் ஒரு பொருளை சாதாரண கண்ணால் பார்க்க முடியாது. அதேபோல் இறைவனை காணும் வல்லமை இந்த கண்களுக்கில்லை! அப்படி ஒருவர் இறைவனை என் கண்ணால் கண்டேன் என்றால் அங்கு உண்மையில்லை! இறைவனை உணர அல்லது அறிய வழிகளை வேண்டுமானால் சொல்லலாம்!
Post a Comment