அறிவியல் பூர்வமாக கடவுளை விளக்க முடியுமா??
அறிவியல் முறையில் அறிந்துகொள்வது என்பது விளக்குவது மற்றும் நிரூபிப்பது இரண்டையுமே குறிக்கும் அனேக அறிவியல் கோட்பாடுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை அனுமானத்திலேயே இருக்கின்றன. பிக் பேங்க் தியரி ந்ரூபிப்பதில் இன்னும் சிக்கல் தீரவில்லை!
.
.
இங்கு என்னால் அறவியல் முறைப்படி ஆண்டவரை நிரூபிக்க முடியாது!
.
முழுமையான ஒரு கருத்தின் மூலம், முழுமயல்லாத ஒற்றை விவரிக்க முடியும் ஆனால் முழுமயல்லாத அறிவியல் என்ற கருத்தைக்கொண்டு முழுமையான இறைவனை நிரூபிப்பது இயலுமா?
.
மனிதனை ஆன்மீகமாகவும் அவன் மூளையை அறிவியலாகவும் எடுத்துக்கொண்டால் மனிதன் மண்டையை உடைத்து மூளையை எடுத்து காண்பித்து விடலாம். ஆனால் மூளையை மட்டும் வைத்துக்கொண்டு மனிதனை காண்பிக்க முடியாதது போன்றதே!
.
மனிதனை ஆன்மீகமாகவும் அவன் மூளையை அறிவியலாகவும் எடுத்துக்கொண்டால் மனிதன் மண்டையை உடைத்து மூளையை எடுத்து காண்பித்து விடலாம். ஆனால் மூளையை மட்டும் வைத்துக்கொண்டு மனிதனை காண்பிக்க முடியாதது போன்றதே!
.
ஆன்மீகத்தில் விடை தெரியாத கேள்வி இறைவன் எப்படி உருவானார் என்ற ஒன்றே ஒன்றுதான் அதுவும் நம் அறிவுக்கு எட்டவில்லை அவ்வளவுதான். இறைவன் உருவானதர்க்கான காரண கர்த்தாவை அறியும் அறிவு நம்மிடம் இல்லை என்றே கருதுகிறேன்!
.
.
ஆனால் அறிவியலில் விடைதேரியாதே கேள்வி அநேகம் உண்டு! பல கருத்துக்கள் நிரூபிக்கப்பட்ட்மல் அனுமானமாகவே உள்ளது! குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்லும் கோட்பாட்டின்படி குரங்கை ஒரு மனிதனாக மாற்றி, அந்த கோட்பாட்டை இன்றுவரை யாரும் நிரூபிக்கவில்லை. குரங்குக்கு இல்லாத பகுத்தறியும் தன்மை மனிதனுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை இல்லை. மரணத்துக்கு பிறகு வாழ்வுண்டா என்ற கருத்தில் இன்னும் அறிவியலார் இருவேறு கருத்துள்ளவராகவே இருக்கின்றனர்.
.
முதன் முதலில் ஆக்சிஜன் அட்மொஸ்பியரில் பாக்டரியா உருவானது என்றும் அந்த ஆக்சிஜன் அதற்க்கு எத்தனையோ மிலியன் ஆண்டுகளுக்கு முன்னேயே உருவானது என்றும் அந்த ஆக்சிஜன் எப்படி உருவானது என்றும் அறுதியிட்டு அறிவியலால் சொல்ல முடியவில்லை. 00000000000000000 என்ற பூஜ்ய நிலையில் இருந்து 1 என்ற திட அல்லது திரவ அல்லது வாயு பொருள் எப்படி உருவாது என்பதற்கு எங்கும் விடையில்லை! அது தானாக உருவாயிருக்கலாம் என்பதே அனுமானம்.
முதன் முதலில் ஆக்சிஜன் அட்மொஸ்பியரில் பாக்டரியா உருவானது என்றும் அந்த ஆக்சிஜன் அதற்க்கு எத்தனையோ மிலியன் ஆண்டுகளுக்கு முன்னேயே உருவானது என்றும் அந்த ஆக்சிஜன் எப்படி உருவானது என்றும் அறுதியிட்டு அறிவியலால் சொல்ல முடியவில்லை. 00000000000000000 என்ற பூஜ்ய நிலையில் இருந்து 1 என்ற திட அல்லது திரவ அல்லது வாயு பொருள் எப்படி உருவாது என்பதற்கு எங்கும் விடையில்லை! அது தானாக உருவாயிருக்கலாம் என்பதே அனுமானம்.
.
அந்த தானாக உருவானது இறைவன் என்ற அளவில்லா சக்தி என்றும் அதுதான் எல்லாவற்றையும் படைத்தது என்பது ஆன்மீக கருத்து ஆனால் அந்த தானாக உருவானது பரிணாம வளர்ச்சி அடைந்து எல்லாம் உருவானது எனது அறிவியல் கருத்து. இதன்படி பார்த்தால் பல கேள்விகள் எழுகின்றன
ஏன் நான்கு தலையுள்ள அல்லது மூன்று காலுள்ள நாய் உலகில் இல்லை ஏன் பகுத்தறிவுள்ள வேறொரு அவய அமைப்புள்ள மனிதனோ அல்லது XXXசோ உருவாகவில்லை. ஏன் நம் கண்முன்னால் உள்ள எந்த குரங்கும் மனிதனாக மாறவில்லை ஏன் பகுத்தறிவுள்ள குரங்கு இல்லை போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்
.
அந்த தானாக உருவானது இறைவன் என்ற அளவில்லா சக்தி என்றும் அதுதான் எல்லாவற்றையும் படைத்தது என்பது ஆன்மீக கருத்து ஆனால் அந்த தானாக உருவானது பரிணாம வளர்ச்சி அடைந்து எல்லாம் உருவானது எனது அறிவியல் கருத்து. இதன்படி பார்த்தால் பல கேள்விகள் எழுகின்றன
ஏன் நான்கு தலையுள்ள அல்லது மூன்று காலுள்ள நாய் உலகில் இல்லை ஏன் பகுத்தறிவுள்ள வேறொரு அவய அமைப்புள்ள மனிதனோ அல்லது XXXசோ உருவாகவில்லை. ஏன் நம் கண்முன்னால் உள்ள எந்த குரங்கும் மனிதனாக மாறவில்லை ஏன் பகுத்தறிவுள்ள குரங்கு இல்லை போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்
.
உலகம் எப்படி தோன்றியது என்று பல்வேறு அறிவியலறிஞர்கள் பல்வேறு கோட்பாடுகளை கூறியுள்ளனர் ஆனால் எதுவும் முழுமையானது அல்ல! கடைசியில் அறிவியல் "கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்" என்ற இரண்டும் கெட்டான் கோட்பாட்டில் முடிவடைகிறது.
.
.
ஆண்டவரை அறிவியலால் அறிய முடியுமா? நம் நாடு பிரதமர் ஒருவரை சந்திக்க அழைத்தால் அவர் எந்த வழியில் வரச்சொன்னரோ அந்த வழியில் வந்தால் காவலர்கள் உள்ளே அனுமதிப்பார்கள் அவரை தரிசிக்க முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று அவர் அனுமதித்த வழியை விட்டுவிட்டு வேறு வழியில் வந்து அவர் வீட்டை சுற்றி சுற்றி வந்தால் என்ன அறிய முடியும்? "உள்ளே அவர் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், அவரை பார்க்கமுடியும் அல்லது பார்க்க முடியாமலும் போகலாம்" இந்த நிலைதான் வரும்.
.
.
அதுபோல் இறைவன் அவரை அறிவதற்கு அனேக வழிகளை அனுமதித்துள்ளார் அப்படி வழிகளில் போய் அவரை அறிந்தவர் பலர் அதில் அடியேனும் ஒருவன். அறிந்தவர் சொல்கிறோம் அவர் இருக்கிறார் என்று ஆனால் அனுமதிக்காத வழியில் போகும் அறிவியலார் சொல்கின்றனர் "இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்" என்று!.
.
.
இந்த இரண்டு நிலையில் நீங்கள் உங்கள் அறிவை வைத்து தேர்வு செய்தால் எதை தேர்வு செய்வீர்கள்?
Post a Comment