« Home | எல்லோரும் எல்லா கேள்விகளுக்கும் இறைவனிடமிருந்து பத... » | மனித தவறுக்கு சூழ்நிலைதான் காரணமா? » | படைக்கப்பட்ட நோக்கம் ஓன்று உண்டு! » | இறைவனின் திருவிளையாடலா? » | இறைவன் ஒரு சர்வாதிகாரியா? » | ஆன்மீகம்! அறிவியல்! - ஓர் ஒப்பீடு » | அறிவியல் பூர்வமாக கடவுளை விளக்க முடியுமா?? » | ஏன் உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்க வேண்டும்? » | நாம் காணும் இந்த உலகம் தானாக உருவானதா? »

அறிவியலால் ஆண்டவரை அறிய முடியுமா?

அண்டத்தின் அற்புதத்தை அணுவிலிருந்து அறிந்துகொண்டுஆண்டாண்டாய் ஆராய்ந்து, அற்புதமாய் இயம்பிவரும் அறிவியல் ஆர்வலர்களுக்கு அடியேன் நான் எதிரியல்ல!

மூட பழக்கங்கள் எல்லாம் முற்றுபெற வேண்டுமென்று முனைப்போடு செயல்பட்டு, அனல்போல புறப்பட்டு முன்னிருந்த தடைகளெல்லாம் முறியடித்தே முயன்றுவந்த பகுத்தறிவு பகலவர்களுக்கும் பெரியார் என்னும் பெருமகனின் பேரறிவு கொள்கைகளுக்கு பெரியதோர் எதிப்பில்லை!

நான் சொல்வதெல்லாம்

இயற்க்கைக்கெல்லாம் தலைவனான இறைவனென்று ஒருவருண்டு! அனைத்துக்கும் மேலான ஆண்டவர் ஒருவருண்டு!
எல்லாவற்றிக்கும் மேலான எம்பெருமான் ஒருவருண்டு!
சகலத்துக்கும் மேலான சர்வ வல்லவர் ஒருவருண்டு என்பதே!

எல்லாம் அறிந்தவர் எவருமில்லை இவ்வுலகில். இருநூறு ஆண்டுக்குமுன் இல்லைஎன்று சொன்னதல்லாம் இன்று அனுபவித்து இனிதே நாம் வாழ்கின்றோம் அனுபவமே அரிதான பாடம்! அறியவேண்டும் என்ற ஆவலே அடுத்த நிலை அறியச்செய்யும்
.

அறிவியல் என்பது அனைவருக்கும் பொது. அவர்கள் அறிந்த அறிவியலை அடியேனும் அறிந்துள்ளேன் ஆனால் ஆண்டவரை அறிவதென்பது அனைவராலும் இயலாது!

காதல் கருணை பாசம் நேசம் கசப்பு இனிப்பு காமம் கோபம் பசி பட்டினி துக்கம் இன்பம் துன்பம் இவைஎல்லாம் அனுபவித்தே அறிய முடியும்! ஆறு வயது சிறுவனுக்கு காமம் என்றால் புரியாது அறுபது வயது பெரியவர்க்கு அத்தனையும் அத்துப்படி

அதுபோல்,

இறைவனை அறிவதும் ஓர் இன்பமான அனுபவம் அதை இயம்புவதேனப்து இங்கு இயலாத காரியம்! அனுபவித்தால் அறிந்துகொள்ளலாம், அறியாததை தெரிவில்லை என்கலாம். ஆனால் ஆண்டவன் என்பவன் இல்லவே இல்லை என்று இறுதியாக் இயம்புவது இவ்வுலகத்தில் என்றுமே ஏற்ற்ப்புடயது அல்ல!

அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அதிக தூரம் எதுவுமில்லை என்ற அறிவான வாதம் தன்னை அடியேனும் ஆமோதிப்பேன் அப்படியே ஏற்றிடுவேன்!

ஆகினும்;

அறிவியலுக்கும் ஆண்டவருக்கும் ஆயிரம் மைல் தூரம் என்றேஅறிவுறுத்த விரும்புகிறேன் அதுவேதான் உண்மை என்பேன்!

தன்னம்பிக்கையும், தளராத முயற்ற்சியும், நுண்ணிய அறிவும், நூதன சிந்தனையும், சாதிக்க முடியுமென்ற சக்திமிக மனத்திடமும், என்னால் முடியுமென்ற எழுட்சிமிகு எண்ணமும் தன்னகத்தே கொண்டவரே தகுதியுள்ள அறிவியலார்

ஆண்டவனை அறிவதோ அதற்க்கேதிரானது

அவனன்றி ஒன்றுமில்லை அடியேன் நான் எதுவமில்லை
எவன் நினைத்தும் ஆவதில்லை ஏற்ற்க்கவில்லை இறைவனென்றால்
மண்ணினால் எனை படைத்தார் மறுபடியும் திரும்பச்செய்வார்
என்னதான் முயன்றாலும் என்னால் ஏதும் ஆவதில்லை
கொஞ்சமும் பெருமையின்றி நெஞ்சில் ஏதும் நெருடலின்றி
தஞ்சமென நின்றாலே தாங்கிடுவார் தன் கரத்தல்

அறிவியலால் அண்டத்தின் அற்ப்புதங்கள் அத்தனையும் அறியலாம்! ஆண்டவரின் படைப்புகளை அடிப்படையிலிருந்து ஆராயலாம்!
ஆன்மீகத்தின் தன்மைகளை ஆழமாக அறியலாம்!
ஆனால் ஆண்டவரை அறிவதென்பது ஒருபோதும் முடியாது!

Post a Comment

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.